தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 1 கப்
பச்சை அரசி - 1/2 கப்
உளுந்த பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பொதினா - 1 கட்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அரிசி , உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நன்றாக இரண்டு அல்லது மூன்று முறை அலசிக் கொள்ளவும்.
நன்றாக அலசிய பின் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கட்டு பொதினாவை இலைகள் மட்டும் பிரித்துதெடுத்து நன்றாக தண்ணீர் விட்டு மண் போக அலசிக் கொள்ளவும்.
நன்றாக அலசிய பின் தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும்.
5 மணிநேரத்திற்கு பின் அரிசி நன்றாக ஊறி இருக்கும் இப்பொழுது மிக்ஸியில் ஊற வைத்த அரிசியை, பொதினா இலைகளுடன் சேர்க்கவும்.
அதிகமாக இருப்பதால் இரண்டு முறையாக அரைத்துக் கொள்ளலாம். இப்பொழுது கொடுத்துள்ள அளவை விட அதிகமாக நீங்கள் எடுத்திருந்தால் மிக்ஸிக்கு பதிலாக கிரைண்டரில் அரைக்கலாம்.
சிறிது கரகரப்பாக அரைக்கவும்.
மிதமுள்ளதை அரிசியை சேர்க்கவும்.
அதனுடன் இஞ்சி சிறிதளவு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது 1/4 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியை அலசி அந்த தண்ணீரை இதனுடன் சேர்க்கவும். நாம் ஊறவைத்த தண்ணீர் விட்டு மட்டும் அரைத்து உள்ளோம் வேறு தண்ணீர் சேர்க்கவில்லை.
1 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
பின் ஒரு மூடி போட்டு இட்லி, தோசை மாவு போன்று 8 முதல் 10 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
நேற்று அரைத்து வைத்தோம் மறுநாள் காலையில் மாவு நன்றாக புளித்து வந்திருக்கும்.
இப்பொழுது நன்றாக மாவை கலந்துக் கொள்ளவும். இப்பொழுது தோசை மாவு ரெடியாக உள்ளது தோசை ஊற்றிக கொள்ளலாம்.
சூட சூட , மொறு மொறு பொதினா தோசை ரெடி!!! இதனுடன் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Please click here & Watch the video in tamil : mint dosa(dosa recipes)
0 கருத்துகள்