பன்னீர் பட்டர் மசாலா




தேவையான பொருட்கள் :


பன்னீர்  -  100 கிராம்

இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

முந்திரி - 10

மிளகாய்த்தூள்  -  1 டீஸ்பூன்

தக்காளி  -  1

வெங்காயம் - 14

பூண்டு  பல்  -  3

கிராம்பு, பட்டை, இலை  - சிறிதளவு

பட்டர்  -  1 மேசைகரண்டி

எண்ணெய் - 1 டீஸ்பூன்



செய்முறை :



  • முந்திரியை ஒரு அரைமணி நேரம் ஊறவைத்து பின் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.  தக்காளியையும் விழுதாக அரைக்கவும்.

  • வெங்காயம், பூண்டு இரண்டையும்  நன்றாக பொடி பொடியாக வெட்டவும். பன்னீரை சிறு சிறு சதுர துண்டுகளாக நறுக்கவும்.

  • ஒரு கடாயில் சிறிது பட்டர் போட்டு பன்னீரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.  பின் அதே கடாயில் மிதமுள்ள பட்டர் மற்றும் எண்ணெய்யிட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  • வெங்காயம் பொன்னிரமாக வந்ததும் இஞ்சிபூண்டு பேஸ்ட், கிராம்பு, இலை, பட்டை, தக்காளி விழுது , உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக வதக்கவும்.

  • பின் முந்திரி பேஸ்ட் போட்டு ஒரு கொதி வந்தவுடன் வறுத்து வைத்துள்ள பன்னீர் சேர்த்து இறக்கவும்.



இந்த மசாலாவை  சப்பாத்தி, நாண் மற்றும் புல்காவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.








































 

கருத்துரையிடுக

0 கருத்துகள்