தேவையான பொருட்கள் :
உளுந்து - 1 கப்
அரிசிமாவு - 2 டீஸ்பூன்
தேங்காய் - 1
ஜீனி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை :
- உளுந்தை அரை மணிநேரம் ஊறவைத்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பூக்க அரைக்கவும். பின் அரிசிமாவு, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
- தேங்காய் துருவி 3 கப் பால் எடுத்து அதனுடன் ஜீனி சிறிதளவு உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து வைக்கவும்.
- பின் ஒரு வாணலியில் எண்ணெயிட்டு மிதமான தீயில் வைத்து சிறிது சிறதாக கிள்ளி போட்டு பொரித்து தேங்காய் பாலில் போட்டு ஊறவைத்து சாப்பிடவும்.
0 கருத்துகள்