ஈரல் வறுவல்(eeral varuval)liver fry/hemoglobin increasing food

 உங்களுக்கு இரத்தம் குறைவாக உள்ளதா !!! உடனே இதனை இரண்டு அல்லது மூன்று வாரம் வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஈரலை சாப்பிட்டால் கண்டிப்பாக இரத்ததில் சிகப்பு அனுக்கள் அதிகரிக்கும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அனிமியா நோய் வராமல் தடுக்க முடியும்.












Please click here & watch the video :  https://www.youtube.com/watch?v=9V3L60DiZs4

தேவையான பொருட்கள் :


ஈரல்  -  600 கிராம்

வெங்காயம் - 2 nos

தக்காளி   -  1 nos

இஞ்சி பூண்டு விழுது  -  2 மேஜைகரண்டி

உப்பு   -  ருசிக்கேற்ப

மல்லி/தனியா  -  2 மேஜைகரண்டி

மிளகு  -  1 டீஸ்பூன்

சீரகம்  -  1 டீஸ்பூன்

சோம்பு  -  2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள்  -  1/2 டீஸ்பூன்

மஞ்சள்த்தூள்  -  1/2 டிஸ்பூன்

கரம் மசாலாத்தூள்  -  1/2 டீஸ்பூன்

எண்ணெய்  -  3 மேஜைகரண்டி

கொத்தமல்லி  -   சிறதளவு


செய்முறை :


முதலில் ஈரலை 4 அல்லது 5 முறை நன்றாக தண்ணீர் விட்டு அலசிக் கொள்ளவும்.  நன்றாக அலசவில்லையென்றால் கவிச்சு வாசணை வரும் அதனால் நன்றாக அலசிக் கொள்ளவும்.


இதற்கு ஒரு மசாலா பொடி செய்யலாம் இந்த மசாலா சேர்த்தால் வறுவல் நன்றாக வாசணையாகவும் ருசியாகவும் இருக்கும்.

முதலில்  மல்லி(தனியா)யை சேர்த்து 1 நிமிடம் வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.















பின்பு இதனுடன் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்.
































2 நிமிடத்திற்கு பின் ஒரு அகலமான தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.



     
நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.







   ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் மற்றும் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.








  வெங்காயம் நன்றாக வதங்கிய பின் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து தக்காளி வெந்து கரையும் வரை வதக்கவும்.




      தக்காளி வதங்கிய பின் அதில் ஈரலை சேர்க்கவும் அதனுடன் 1/4 டீஸ்பூன் உப்பு, மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா பொடி சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.














குறிப்பு : காரம் குறைவாகதான் சேர்த்துள்ளேன் நீங்கள் காரம் அதிகமாக சாப்பிடுவீர்கள் என்றால் உங்கள் சுவைக்கு ஏற்றாற் போல் சேர்த்துக் கொள்ளவும்.

























      மசாலா பொடி சேர்த்து 5 நிமிடத்திற்கு பின் 250மில்லி லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.




     நன்றாக கலந்துக் கொள்ளவும் பின்பு ஒரு மூடி போட்டு மூடி வைத்து வேகவைக்கவும்.  ( குக்கரிலும் வேகவைக்கலாம் இதே அளவு தண்ணீர் சேர்த்து 2 அல்லத 3 விசில் வைத்து இறக்கி கொள்ளலாம்.

ஒரு 10 நிமிடத்திற் பின் கலந்துவிடவும் அடிகடி கலந்துவிடவும் இல்லையென்றால் அடிபிடித்துவிடும்.  





இப்பொழுது உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். 1/4 டீஸ்பூன் உப்பு சேர்க்கின்றேன்.  நான் மொத்தமாக உப்பு சேர்க்காமல் ஒவ்வொரு ஸ்டேஜிலும் சிறிது சிறிதாக உப்பு சேர்த்துள்ளேன் இவ்வாறு சேர்க்கும் போது வறுவல் நன்றாக சுவையாக இருக்கும்.




மீண்டும் 5 அல்லது 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.



இப்பொழுது வறுவலில் இருந்து எண்ணெய் நன்றாக பிரிந்து வருகின்றது ஈரலும் நன்றாக வெந்து விட்டது 
கொத்தமல்லி தூவி இறக்கிக் கொள்ளலாம்.






😋😋😋மிகவும் சுவையான ஈரல் வறுவல் ரெடி!!!!
 இதனை ரசம் சாதம் மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். அப்படியே இதனை ஸ்னாக்சாகவும் சாப்பிடலாம்.


    








      

 இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யவும்.  எமது Facebook page ல் இணைந்துக் கொள்ளுங்கள் மேலும் பயனுள்ள புதிய பதிவுகளை பார்க்கலாம்.




English Channel link : https://selvisrecipes.blogspot.com/

Youtube Channel link: https://www.youtube.com/channel/UCRuCNqq2GP9o4ARSKGvct6A






கருத்துரையிடுக

0 கருத்துகள்