தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 கப்
நெய் - 2 மேசைகரண்டி
பட்டை,இலை,கிராம்பு,ஏலக்காய் - சிறிதளவு
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 1
முந்திரி - 7
திராட்சை - 7
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
- பாசுமதி அரிசியை அலசி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை நன்றாக வடித்து ஒரு வாணலியில் சிறிது நெய்யிட்டு லேசாக வதக்கி எடுத்து வைக்கவும்.
- வெங்காயம், பச்சைமிளகாய்யை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
- குக்கரில் நெய்யிட்டு பட்டை,இலை,கிராம்பு,ஏலக்காய் போட்டு தாளித்து பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது , பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின் அரிசி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.
- முந்திரி, திராட்டை வறுத்து அலங்கரித்து பரிமாரவும்.
0 கருத்துகள்