தேவையான பொருட்கள் :
தக்காளி - 3
பெரியவெங்காயம் - 3
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
பூண்டு பல் - 5
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டை,கிராம்பு,இலை,கசகசா - சிறிதளவு
எண்ணெய் - 1 மேசைகரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
அரிசி - 1 கப் ( 1/4படி)
உப்பு - தேவைக்கேற்ப
வனஸ்பதி - 1 டீஸ்பூன்
செய்முறை :
- அரிசியை 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் (அ) வடித்து உதிரி உதிரியாக வேகவைத்து எடுத்து வைக்கவும்.
- வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். சோம்பை லேசாக பொடித்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயிட்டு சோம்பு தூள், பட்டை, கிராம்பு, இலை, கருவேப்பிலை, வெங்காயத்தை போட்டு சிறிது வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனபின் தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள்த்தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வனஸ்பதியை சூடு செய்து சாதத்தில் ஊற்றி ஒரு கிளறு கிளரிய பின் வதக்கி வைத்துள்ள கலவையை சேர்த்து நன்றாக சாதத்துடன் சேர்த்து கிளறி விடவும். பின் கொத்தமல்லி தூவி சாப்பிடலாம்.
0 கருத்துகள்