தேவையான பொருட்கள் :
அகத்திக்கீரை - 1 கட்டு
அரிசி கலைந்த தண்ணீர் - 4 கப்
சின்னவெங்காயம் - 10
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 1/2
மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க :
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
அரைக்க :
தேங்காய்துருவல் - 1/2 கப்
சோம்பு - 2 டீஸ்பூன்
செய்முறை :
- அரிசி கலைந்து 2,3 வது தண்ணீர் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் 4 வது தண்ணீர் கீரையை அலச வைத்துக்கொள்ளவும்.
- வெங்காயத்தை இரண்டாக வெட்டவும், தக்காளி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும், பச்சைமிளகாய் இரண்டாக கீரி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் அரிசி கலைந்த தண்ணீரில் அலசிய கீரை, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்.
- சிறிது கொதித்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைக்கவும்.
- பின் அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்ப சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய்யிட்டு கடுகு போட்டு தாளித்து கொட்டவும்.
Note : வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. இரத்தத்தில் உள்ள நச்ச பொருட்களை நீக்க கூடியது.
0 கருத்துகள்