சாம்பார்



தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு - 1/2 cup
சின்ன வெங்காயம் - 10
பச்சைமிளகாய் - 5
கட்டி பெருங்காயம் - 1சிறு துண்டு
மஞ்சள்தூள் - 1/4 spoon
கேரட் - 1 (வட்டமாக (அ) அரைவட்டமாக நறுக்கி கொள்ளவும்)
முருங்கைகாய் - 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
கத்திரிக்காய் - 1 ( நான்கு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
புளி - 1
தேங்காய் துருவல் - 1/4cup
சீரகம் - 1 teaspoon
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 1 teaspoon
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 table spoon

செய்முறை :

  1. துவரப்பருப்பை கழுவி 2 டம்ளா் தண்ணீா் சோ்த்து அதனுடன் பெருங்காயம் மற்றும் மஞ்சள்தூள் சோ்த்து குக்கரில் 2 விசில் விடவும்.
  2. புளியை சிறிது தண்ணீா் சோ்த்து சிறிது நேரம் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீா் சிறிது சோ்த்து அதில் காய்களையும், பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தை தோல் நீக்கி சோ்க்கவும். உப்பு சோ்த்து வேகவைக்கவும்.
  4. ஒரு கொதி வந்தவுடன்  புளி கரைசல், வேகவைத்த பருப்பு  மற்றும் அரைத்த தேங்காய் சோ்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.
  5. பின் ஒரு கடாயில் எண்ணெய்யிட்டு கடுகு போட்டு வெடித்தவுடன் கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும்.
Note :  பருப்பு குழைந்து விட்டால் கடைசியாக சோ்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். அல்லது பருப்பு சிறிது வேகவில்லை என்றால் காயுடன் சோ்த்து வேகவைக்கவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்